Saturday, August 16, 2014

புலிப்பார்வை மீதான மாணவர்களின் போராட்டமும்.. சண்டையும் : எமது பார்வை.



எமது பார்வை: இந்தப் பிரச்சனைக்கு மாணவர்களிடமும் புலிப்பார்வை குழுவினரிடமும் உள்ள விரிசல் தான் காரணம் எனலாம்.

சீமானின் நிலைப்பாடு இதில் தெளிவானது. புலிப்பார்வை படமும் அண்மையில் வெளியாகிய பல ஈழத்தமிழர் விரோத திரைப்படங்கள் போல வெளியாகாமல்.. அதனை நெறிப்படுத்தி வெளியிடச் செய்வதே சீமானின் நோக்கமாக உள்ளது. இதற்காக அவரைப் பாராட்டலாம். எல்லாரும் வெளியில்.. இருந்து.. போராடிக் கொண்டிருந்தால்.. படத்தை வெளியிடுபவர்கள் வேறு மார்க்கங்களை அணுகி முற்றிலும் எமக்கு பாதகமான படமாக இதனை வெளியிட முடியும். அந்த வகையில்.. சீமானின்.. இந்த அணுகுமுறையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. முற்றிலும் எமக்கு பாதகமாக படம் வெளியிடப்படுவதை தடுப்பதே சீமானின் நோக்கமாக இருக்க முடியும்.

முன்னரும்.. ஹிந்தியர்களாலும்.. மலையாளிகளாலும் உருவாக்கப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பை காட்டிய போதும் அவை தமிழகம் தவிர வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. ஈழத்தமிழர்கள் எமக்கு விரோதமாக எமது நியாயங்களை பலவீனப்படுத்துவனவாக அவை அமைந்திருந்தன. இந்த நிலையை புலிப்பார்வையிலும் உருவாக்க சீமான் விரும்பி இருக்காமல் இருக்கலாம்.

மாணவர்களின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால்.. அவர்கள் இதனை சீமானுக்கு எதிராக அன்றி.. புலிப்பார்வைக்கு எதிராக மட்டும் வைத்திருப்பதோடு.. இந்தப் போராட்ட சூழலை மையப்படுத்தி.. காரணம்காட்டி.. புலிப்பார்வை படக்குழுவினர் மீது சீமான் போன்ற தலைவர்களின் உதவியுடன் ஓர் அழுத்தத்தை பிரயோகிக்க பாவித்திருக்கலாம். அடிதடி.. என்று போய் இருக்கத் தேவையில்லை.

தமிழர்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க காத்திருக்கும் சக்திகளுக்கே இதனால் இலாபமாகும். அத்தோடு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளும் இப்படியான உணர்ச்சிச் செயற்பாடுகளால் வீணடிக்கப்படுகின்றன.

சீமான் போன்ற தலைவர்கள் படக்குழுவினர் மற்றும் மாணவர்களுக்கிடையே தொடர்பாளர்களாக இருப்பதை விட்டு.. பிரச்சனைகள் பெரிதாக அனுமதிப்பது நல்லதல்ல. அது நாம் தமிழர் கட்சி கொண்ட கொள்கைக்கு உதவுமாப் போலும் இல்லை..!

ஆகவே எதிர்காலத்தில்.. இவ்வாறான உணர்ச்சிமிகு வேளைகளில் தலைவர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்ட இதர தரப்புக்களும் பொறுமையோடும்.. தொலைநோக்கோடும்.. ஒற்றுமையோடும் செயற்பட முன்னுரிமை அளிக்க வேண்டும்.. என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அதுவே பாலச்சந்திரன் போன்ற சிறுவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு செய்யும் மரியாதையாகவும் இருக்க முடியும்.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:11 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க